Thursday, October 5, 2017

அவள்

உயிராய் என் நினைவு எங்கு 
இருந்தாலும் .. உணர்வாய் என்றும்  
உன் அருகில்

*****************************************.

என் கண் தேடும்  கண்மணியே ,
உன் முகம்  கண்டு என் அகம்  
மலர்ந்தேன்..

****************************************

மேகம் கலைந்த நிலவை போல்  
உன் முகம் என் கண்களில்...

****************************************

உன் பார்வையில் மலர்கிறேன்..
உன் அன்பில் வளர்கிறேன்..
உன் பேச்சில் உதிர்கிறேன்..
என்றும் மலராய் உன் மனதில்..

****************************************

மழை சாலையில் 
என் கை நடுவில் 
அவள் விரல்கள் !!!

****************************************

நதியென நீ .. இலையென நான்..
மிதக்கிறேன் என்றும் உன் நினைவாய்.

****************************************

கல்லென உன் கோவங்கள் என் மேல் விழ..
இருந்தும் மிதக்கிறேன் உன் அன்பால்..

இவன்,
ம.பால்ராஜ் 

No comments:

Post a Comment

அவள்

உயிராய் என் நினைவு எங்கு  இருந்தாலும் .. உணர்வாய் என்றும்   உன் அருகில் *****************************************. என் கண் தே...