அதிகாலை பொழுது, பனியால் வெட்க்கும்
புல்வெளி சாலை - சற்று தொலைவில் ஏதோ ஒன்று,
மயில் போன்ற செய்கை - ஆனால் அது
மயிலும் இல்லை,
மனம் மயங்கும் குரல் - அனால் அது
குயிலும் இல்லை,
மீன்களின் நேர் எதிர் பார்வை - ஆனால் அது
குளமும் இல்லை,
நளினம் தெளிக்கும் நடை - ஆனால் அது
மானும் இல்லை...
ஆவல் துடிக்க சற்றே நகர்ந்தேன்,
கண்டேன் பெண்மையை,
அழகின் அழகினை..
இவன்,
ம.பால்ராஜ்
No comments:
Post a Comment